பவனஞ் சுடர்கங்கை பார்வெளியை ஆட்டிடும்
பரமசிவஞான மகனே
புவனங்கள் ஈரேழும் அடக்கியே காத்திடும்
புவனேஸ்வரி யீன்ற புவனே
கவளமா முகத் தண்ணலே காத்திடும்
அங்குச பாசக் கையனே
குவளைக் கண்ணியைச் சென்னியில் மிலைந்த
கும்பழாவளைத் தெய்வமே.
காண்பவர்க் கரியனே காட்சிக் கினியனே
கருணை சொரி ஆனை முகனே
மாண்பெருகு மாருத வல்லிக்குப் பிணி தீர்த்து
மனம் பூத்து மகிழ் வுண்டாக
விண்டுவின் தளைநீக்க வீரமுருகேசனுடன்
விரும்பி யுரை செய்த விமலா
கொண்டல் தவழ் அளவையெனுங் குருபதியில்
கோவில் கொண்ட கும்பழாவழைத் தெய்வமே.
தெங்குகுலை சொரிகின்ற தேனீரால் முழுக்காடும்
தேவர ளவையூ ருறையு நாதா
பங்குகொள் தொண்டரின் பாசவனை யறுக்கின்ற
பண்ணவன் பெற்ற மகனே
துங்குவெண் நெஞ்சினில் பங்கு கொள்
ஆணவப் பாசத்தை நீக்குகின்ற
அங்குச பாசத்தாலதை அடக்கியே காத்திடும்
கும்பழாவளைத் தெய்வமே.
புவனங்கள் ஈரேழும் அடக்கியே காத்திடும்
புவனேஸ்வரி யீன்ற புவனே
கவளமா முகத் தண்ணலே காத்திடும்
அங்குச பாசக் கையனே
குவளைக் கண்ணியைச் சென்னியில் மிலைந்த
கும்பழாவளைத் தெய்வமே.
காண்பவர்க் கரியனே காட்சிக் கினியனே
கருணை சொரி ஆனை முகனே
மாண்பெருகு மாருத வல்லிக்குப் பிணி தீர்த்து
மனம் பூத்து மகிழ் வுண்டாக
விண்டுவின் தளைநீக்க வீரமுருகேசனுடன்
விரும்பி யுரை செய்த விமலா
கொண்டல் தவழ் அளவையெனுங் குருபதியில்
கோவில் கொண்ட கும்பழாவழைத் தெய்வமே.
தெங்குகுலை சொரிகின்ற தேனீரால் முழுக்காடும்
தேவர ளவையூ ருறையு நாதா
பங்குகொள் தொண்டரின் பாசவனை யறுக்கின்ற
பண்ணவன் பெற்ற மகனே
துங்குவெண் நெஞ்சினில் பங்கு கொள்
ஆணவப் பாசத்தை நீக்குகின்ற
அங்குச பாசத்தாலதை அடக்கியே காத்திடும்
கும்பழாவளைத் தெய்வமே.

Keine Kommentare:
Kommentar veröffentlichen